Tuesday, September 3, 2019

IIT JEE Main JEE Advanced

JEE Main என்பது NIT(National Institute of Technology), IIIT, CFTi போன்ற கல்லூரிகளில் பொறியியல் படிக்க கண்டிப்பாக எழுத வேண்டிய நுழைவுத் தேர்வு.

மேலும், JEE ADV தேர்வெழுத்துவதற்கான முதல் படியும் இதுவே. JEE MAIN தேர்வில் முதல் 2,45,000 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களே JEE ADV எழுத தகுதி பெறுகிறார்கள். JEE ADV நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே IIT(Indian Institute of Technology) யில் சேருவதற்கு தகுதி பெறுகிறார்கள்.

2019ம் வருடத்தில் இருந்து JEE Main நுழைவுத் தேர்வை இரண்டு முறை எழுதும் வாய்ப்பை இந்திய அரசு துவங்கி உள்ளது. அதாவது 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், ஏப்ரல் மாதத்தில் ஒரு முறையும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். மாணவர்கள் இரண்டு முறையும் எழுதலாம், ஒரு முறையும் எழுதலாம். எந்த தேர்வில் மதிப்பெண் அதிகம் பெற்றிருக்கிறாரோ அதையே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும்.

மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்ற மாணவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்ணைப் பொருத்து பட்டியலிடப்படுகிறது. அதாவது 100 பேர் தேர்வு எழுதி உள்ளார்கள் எனில் அதில் நீங்கள் எத்தனையாவது மதிப்பெண் பெற்றுஇருக்கிறீர்கள் என்பதற்கேற்ப நீங்கள் மதிப்பெண் பட்டியலில் இடம் பெறுவீர்கள். உதாரணத்திற்கு, 100 பேர் இந்த முறை தேர்வு எழுதி உள்ளார்கள்  என்று வைத்துக் கொள்ளுங்கள், ராகுல் 100 மதிப்பெண்  பெற்றிருக்கிறார், சிபி 97 மதிப்பெண் பெற்றிருக்கிறார், உங்கள்(லதா) மதிப்பெண் 95 என்றால், மதிப்பெண் பட்டியலில் கீழ்கண்டவாறு இருக்கும்:
ராகுல்   100
சிபி         99
லதா      98

No comments:

Post a Comment